-->

சைத்தான் ராணியின் பூத அடிமைகள்

*ஜெய்குமார் எழுதிய*
 *_சைத்தான் ராணியின் பூத அடிமைகள்_*
 *வீர விக்கிரமனின் விருவிருப்பான மாயாஜாலக் கதை*



விசித்திரமான சூழலில் பிறந்த மகத தேசத்து அரசனின் 12 பெண் குழந்தைகளை கடத்திச் செல்லும் வேதாளம் தன் விரோதிகளால் தாக்கப்பட்டு உயிரிழக்க குழந்தைகள் அனாதைகளாக்க படுகிறார்கள். அவர்களை கண்டெடுக்கும் 12 வணிகர்கள் தம் ஊர்களுக்கு எடுத்துச் சென்று தனித்தனியாக வளர்க்கிறார்கள். பதினாறு ஆண்டுகள் கழித்து விபரம் அறியும் மகத தேசத்து மன்னன் தன் மகள்களை மீட்டுவர தீர்மானித்ததும் நினைவுக்கு வந்தவன் வீர விக்கிரமன்

மலர் தேவதையின் ஆசீர்வாதத்தால் சில மாயா சக்திகளையும் ஒரு மந்திரக் கழுகையும் பெற்றிருக்கும் விக்கிரமன் அவற்றின் மூலம் பல வீர சாகசங்கள் நடத்தி நல்லவர்களுக்கு உதவி செய்கிறான்.12 இளவரசி களையும் மீட்டுக் கொண்டு வருவதாக ஒப்புக் கொண்டு அவன் கிளம்பியதும் சந்திக்கும் ஆபத்துகளும் இரக்கமற்ற வில்லர்களின் கொடூரச் செயல்களும் பல.. தனித்தனிக் கதைகள் என்றாலும் ஒரு தொடர் போல் வெளிவந்த இந்த நாவல்களில் இது பத்தாவது இளவரசியை பற்றியது

அவள் இருந்த இடத்தை அணுகும் போது அவளும் அவளை வளர்த்த வணிகரும் சைத்தான் ராணியின் பூத அடிமைகளால் கடத்தப்பட்டது தெரிய வர அந்த இடத்தை கண்டுபிடிக்க துப்பறிந்து செல்லும் வழிகளில் ஏற்படும் ஆபத்துகளை தன் சாதுர்யத்தாலும் சாகசங்கலாளும் முறியடித்து இருவரையும் மீட்டு மகத தேசத்திற்கு அனுப்பி வைக்கும் இந்த மாயாஜால கதையின் pdf ஐ இன்று படித்து மகிழுங்கள்

http://bit.ly/2ZS29Bs

 *ஜெய்குமார் எழுதிய*
 *_சைத்தான் ராணியின் பூத அடிமைகள்_*
 *வீர விக்கிரமனின் விறுவிறுப்பான மாயாஜாலக் கதை*