Skip to main content
×
Telegram Channel Join Now!

பிசாசு மனிதன்

பிசாசு மனிதன்
*பிடி சாமி எழுதி ஜெயராஜ் வரைந்த ஓவியங்களுடன்*
 *பிசாசு மனிதன்*
 *திகில் படக்கதை*

பிரபல விஞ்ஞானி தாமஸ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் இந்த படக்கதையின் திகில் பக்கங்கள் ஆரம்பமாகின்றன. சவ அடக்கத்துக்கு வரும் அவரது மகள் ரீட்டா தாமஸ் இளமைக்காலத்தை நீட்டிப்பதற்காக கண்டுபிடித்த ஒரு வினோத மருந்து இயல்பான குணத்தையே கொடூரமாக மாற்றுவதாக அமைந்ததே அவரது தற்கொலைக்கு காரணம் என்பதை தெரிந்து கொள்கிறாள்.பாபு என்ற இளைஞனோ  அவளுக்கு உதவுவதாகச் சொல்லி இடையிடையே குறிக்கிடுகிறான். இதன் நடுவில் அந்த மருந்தின் வீரியமான விபரீத குணத்தை அறிந்து கொண்ட தாமஸின் உதவியாளன் ராயன் அந்த மருந்தை அபகரித்து தனக்குள் செலுத்தி கொண்டு கொடூர குணம் கொண்ட பிசாசு மனிதனாகிறான்.

அதன்பின் அந்த நகரில் பல இளம்பெண்களின் கொலைகள் ரத்தமும் சதையும் உண்பதற்காக நடக்கின்றன.. வெறிபிடித்த அந்த பிசாசு மனிதனின் நடமாட்டத்தை தடுக்க முடியாமல் அனைவரும் திணறுகின்றனர். ரீட்டாவின் சதையும் ரத்தமும் உண்ணவும் பருகவும் சுவையாக இருக்கும் என்று ஆசைப்படும் பிசாசு மனிதன் ராயன் அவளையே கடத்தி விடுகிறான்.

அவளை பத்திரமாக மீட்டு கொண்டுவர பாபு கிளம்புகிறான்.. உண்மையில் அந்த பாபு யார்?? பிசாசு மனிதனிடமிருந்து ரீட்டாவை மீட்க அவனால் முடிந்ததா ? அதற்காக அவன் செய்த சாகசங்களும் குயுக்திகளும் என்னென்ன? இதோ.... பேய்க்கதை மன்னன் பிடி சாமி எழுதி ஜெயராஜ் வரைந்த அற்புதமான கவர்ச்சியான ஓவியங்கள் நிறைந்த இந்தப் படக்கதை விவரிப்பது பிடிஎஃப் வடிவில் உங்களுக்கு.....

http://bit.ly/2QbbeFt

 *பிடி சாமி எழுதி ஜெயராஜ் வரைந்த ஓவியங்களுடன்*
 *பிசாசு மனிதன்*
 *திகில் படக்கதை*

You Might Also Like:

    AdBlocker Detected!

    AdBlock Detected Icon

    Dear visitor, it seems that you are using an ad blocker. Please consider disabling it to support our website and continue enjoying our content for free.

    Note: The Brave browser is not supported on our website. Please use a different browser for the best experience.

    Once you're done, please refresh the page.