-->
Skip to main content
adslot
Tamil

கடல் மாளிகை அரக்கன் | Kadal Malikai Arakkan



*இன்பராணி எழுதிய*
*_கடல் மாளிகை அரக்கன்_*
*மனதை மயக்கும் மாயாஜால கதை*

கடலுக்கடியில் அதியற்புத வசதிகளுடன் அதிஅழகாக கட்டப்பட்டிருக்கிறது அந்த மாளிகை. அங்கு வாழும் மந்திரவாதி வீர கேது மகேசபுரி மன்னன் குலசேகரனை கொன்று மகாராணியையும் கடத்தி வந்து தன் மனைவி உயிர் பிழைப்பதற்காக மகாராணியின்
தாலியை கழட்டி பூஜை செய்கிறான்.

தந்தையின் சவஅடக்கத்திற்கு வந்த நான்கு இளவரசர்கள் மூலமாக இதே போன்ற சம்பவங்கள் ஏற்கனவே நான்கு முறை நிகழ்ந்திருப்பது இளவரசன் ரகுபதிக்கு தெரியவருகிறது. இந்த தொடர் கொலைகள் மற்றும் கடத்தல்களின் ரகசியத்தை அறிய வீரமாக கிளம்புகிறான் ரகுபதி..

ஆனால் அந்த விவகாரம் வீரகேதுவே இதில் ஒரு பகடைக்காயாக பயன்படுத்தப் பட்டிருப்பதில் ஆரம்பித்து மூக்கன் என்ற மாயாவி விக்கிரமாதித்த மன்னரால் விதர்ப்ப நாட்டு ராணிக்கு பரிசாக கொடுக்கப்பட்ட மாயவாளையும் மந்திரக்கோலையும் கைப்பற்ற முயற்சிப்பதில் முடிகிறது.

இந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து தன் தாயையும் மற்ற நாட்டு மகாராணிகளையும் ரகுபதி எப்படி காப்பாற்றினான் என்பதை விறுவிறுப்பான சம்பவங்களால் பரபரப்பான பக்கங்களில் படிக்க வைக்கும் இந்த கதையின் pdf இன்று உங்களுக்காக

டவுன்லோடு

*இன்பராணி எழுதிய*
*_கடல் மாளிகை அரக்கன்_*
*மனதை மயக்கும் மாயாஜால கதை*
Buka Komentar
Tutup Komentar