-->
Skip to main content
adslot
Tamil

மறுபடியும் மரணம் - ராஜேந்திரகுமார்

*இளமை எழுத்தாளர்*
*ராஜேந்திரகுமாரின்*
*மறுபடியும் மரணம்*
*திக் திக் திகில் நாவல்*


சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு கோவா வருகிறாள் மரியா டீ சௌசா. வந்தவள் வீட்டுக்குப் போகாமல் மங்கேஷ் டெம்பிள் செல்கிறாள். சிவன் சிலையை பார்த்து ஏன் என்று கத்துகிறாள். அவளைப் பார்த்து அங்கிருக்கும் நாய்கள் ஊளையிட்டு அழுகின்றன. உடன் செல்லும் காதலன் ஜோ அவள் கண்கள் இமைக்காமல் இருப்பதை கண்டு கலவரமாகி அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு வீடு வருகிறான்.

அசைவ விரும்பியான அவள் எதிர்வீட்டு பாகீரதி அம்மாளின் சைவ சமையலை விரும்பி உண்கிறாள். அந்த நேரத்தில் பாகீரதியின் மகள் காயத்ரி பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட தகவல் வருகிறது. அதன்பின் பல மர்மமான கொலைகள் நடக்கின்றன.

நிர்மலா, ராஜா, பரசுராமன் என பலர் இறக்கும் இடங்களில் மரியா அமானுஷ்யமான சக்தியுடன் இருந்திருப்பது தெரியவருகிறது. இன்னும் இருவர் அந்த வரிசையில் கொல்லப்பட இருக்கும்போது பாகீரதி அம்மாள் திடீரென இறந்து போகிறாள். அதன்பின் கொல்லப்படவேண்டிய இருவர் என்ன ஆனார்கள்? காயத்ரியின் பழிவாங்கும் படலம் முடிவுற்றதா?

திகில் நிறைந்த அமானுஷ்ய கதையான இதன் pdf உங்களுக்கு முடிவைச் சொல்லும்.

Buka Komentar
Tutup Komentar